விருத்தாசலத்தில்கண்ணில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலத்தில்கண்ணில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு கூட்டமைப்பின் வட்ட தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டமானது, வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு பென்ஷன் ரூபாய் 6 ஆயிரத்து 750-ஐ அகவிலைப்படியுடன் வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story