சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.ரவிசந்திரன் தலைமை தாங்கினார். எஸ்.சங்கரி முன்னிலை வகித்தார். எல்.பழனி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை பெ.பிரபா தொடங்கி வைத்து பேசினார் ஆர்ப்பாட்டத்தில், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஜி.புவனேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story