சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:46 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜு முன்னிலை வகித்தார். நாகை மாலி எம்.எல்.ஏ. போராட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி, மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல், சாலை பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலம் முறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார்.


Next Story