16 அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்


16 அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்
x

16 அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரியில் முன்னாள் அமைச்சர் மாதவனின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு என்பீல்டு பகுதியில் அவர் நிறுவிய பாரி வள்ளல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாதவன் கால்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைவரும் முன்னாள் அமைச்சர் மாதவனின் மகளுமான வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாதவனின் மகன் அருளாளன் முன்னிலை வகித்தார்,

விழாவிற்கு வந்த அனைவரையும் பள்ளி மேலாளர்கள் கிருஷ்ணன், சரவணன் வரவேற்றனர். பள்ளி முதல்வர் ஷாம் பிராங்கின் டேவிட் வரவேற்றார். கால்பந்து போட்டியை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ராமராஜபாண்டியன் தொடங்கி வைத்தார். இறுதிப்போட்டியில் பங்கேற்ற அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

போட்டியில் முதல் பரிசாக ரூ 50,090 ரொக்கம் மற்றும் கோப்பை திருச்சி காஜா மியான் மேல்நிலைப்பள்ளி அணிக்கும், 2-ம் பரிசு ரூ 40,090 மற்றும் கோப்பை சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி அணிக்கும் 3-ம் பரிசாக ரூ.30,090 மற்றும் கோப்பை வத்தலகுண்டு ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளி அணிக்கும், 4-ம் பரிசு ரூ20,090-ம் சிங்கம்புணரி பாரிவள்ளல் மேல்நிலைப் பள்ளி அணிக்கும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தொழிலதிபர் மணிமாறன், சரவணன்,காந்திமதி நகை மாளிகை உரிமையாளர் சிவக்குமார், ரெங்கநாதன் காந்திமதி கோல்டன் பேலஸ் ஆனந்த் கிருஷ்ணன், புசலியம்மாள் மருத்துவமனை சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜ்குமார், பொது மருத்துவர் அருள்மணி நாகராஜன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில், நகர செயலாளர் கதிர்வேல், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், தொழிலதிபர் கே.ஆர்.ஏ.கணேசன், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், அயலக அணியின் மாவட்ட துணை செயலாளர் புகழேந்தி, ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், திரைப்பட தயாரிப்பாளர் முருகேசன், தொழிலாளர் அணி மாவட்ட துணை செயலாளர் ஞானி செந்தில், ஆசிரியர் எஸ்.எஸ்.மணியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயக்குமார், அலாவுதீன், மீனா, கூட்டுறவு சொசைட்டி வையாபுரி செந்தில், தொழில்நுட்ப பிரிவு மாடர்ன் சையது, முரசொலி கார்த்திக் உளளிட்ேடார் கலந்து கொண்டனர்.


Next Story