தியாகி இமானுவேல் சேகரன் படத்திற்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவிப்பு


தியாகி இமானுவேல் சேகரன் படத்திற்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவிப்பு
x

தியாகி இமானுவேல் சேகரன் படத்திற்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்தார்

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் மீனாட்சி தெருவில் உள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரனின்நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி அலுவலகத்தில் இமானுவேல் சேகரனின் உருவ படம் அலங்கரித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் (பொறுப்பு கோவா) மாணிக்கம்தாகூர் எம்.பி. கலந்து கொண்டு இமானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மாபட்டி பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தனக்கன்குளம் எம்.பி.எஸ்.பழனிக்குமார், மதுரை தெற்கு மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் சுப்பிரமணியன், அமைப்பு சாரா பிரிவு மாநில பொதுச்செயலாளர் துரைமுருகன், மாவட்ட தலைவர் பொன்.மகாலிங்கம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சவுந்தர், துணை தலைவர் வித்யாபதி, திருமங்கலம் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புரத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. தமிழர் தேசிய கழக தலைவர் வக்கீல் வையவன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் குமார், முத்துப்பாண்டி, சரவணன், மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


Related Tags :
Next Story