சாலை விரிவாக்கத்திற்காகமின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி தீவிரம்


சாலை விரிவாக்கத்திற்காகமின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 March 2023 12:15 AM IST (Updated: 5 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாலை விரிவாக்கத்திற்காக மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி

கூடலூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில், சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. நகர் பகுதியில் இருவழிச்சாலை அமைக்கப்படுவதால் தடுப்புச்சுவரில் இருந்து தலா 21 அடிக்கு இருபுறமும் சாலை அகலப்படுத்தப்படுகிறது. இதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி முடிவடைந்து உள்ளது. இந்நிலையில் தற்போது. மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி குமணன் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மின்வாரியத்துறை ஊழியர்களிடம் அவர் வலியுறுத்தினார்.

1 More update

Related Tags :
Next Story