முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்


முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்
x

ராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

ராமநாதபுரம்

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர், மருத்துவஅணி துணை செயலாளர் டாக்டர் மணிகண்டன், எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்து, அ.தி.மு.க. கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த விழாவில் நகர் அவைத்தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராமசேது, முன்னாள் நகர் செயலாளர் வரதன், கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், ராம்கோ தலைவர் சுரேஷ், இயக்குனர் தஞ்சி சுரேஷ், நகர் இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், வட்ட செயலாளர் ரமேஷ், சீனியப்பா தர்கா கிளை செயலாளர் பச்சைமால், கீழக்கரை நகர் இளைஞர் பாசறை செயலாளர் செல்வகணேச பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story