முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தரிசனம்


முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தரிசனம்
x
தினத்தந்தி 5 March 2023 6:45 PM GMT (Updated: 5 March 2023 6:47 PM GMT)

நத்தம் மாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல்

நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இதில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், நகர செயலாளர் சிவலிங்கம், தொழிலதிபர் அமர்நாத், தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், நகர் பேரவை செயலாளர் சேக்தாவூது, அவைத்தலைவர் சேக்ஒலி, நகர பொருளாளர் சீனிவாசன் உலுப்பகுடி கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சக்திவேல் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story