மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி

எட்டயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலியானார்.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சித்தவன் (வயது 75). இவர் கருப்பூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவராக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் யூனியன் அலுவலகத்தில் சொந்த வேலையாக சென்று விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு முத்தலாபுரம் அருகே வளைவில் திரும்ப முடியாமல் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி அருகில் இருந்த பள்ளத்தில் கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story