முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 11 Nov 2022 6:45 PM GMT (Updated: 11 Nov 2022 6:46 PM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சிகளும் ஆஜர் ஆகாததால் வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு(புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஏற்கனவே கடந்த 5 முறை இவ்வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதனால் நேற்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகளை கட்டாயம் ஆஜர்படுத்த வேண்டுமென சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்று நடந்த விசாரணையின்போதும் அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story