40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்


40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.

கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா சேமங்கலம் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னா் அவர் நிருபா்களிடம் கூறியதாவது:-விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வந்தன. தற்போது 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு திறக்கப்படுகிறது.

கொள்முதல் நிலையங்கள்

இதன்படி, மயிலாடுதுறை தாலுகாவில் இளந்தோப்பு, திருவாளபுத்தூர், கிழாய், கொற்கை, கோடங்குடி, திருச்சிற்றம்பலம், ஆத்துக்குடி, முருகமங்களம், தாழஞ்சேரி, திருவிழந்தூர், சித்தமல்லி, 24 வில்லியநல்லூர் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். மேலும் குத்தாலம் தாலுக்காவில் பழையகூடலூர், மேலையூர், குத்தாலம், நச்சினார்குடி, கங்காதாரபுரம், கொக்கூர், வழுவூர், எழுமகலூர், ஆலங்குடி, 52 வில்லியநல்லூர், பேராவூர் ஆகிய இ்டங்களிலும், சீர்காழி தாலுகாவில் கொண்டத்தூர், அரசூர், பனங்காட்டாங்குடி, நாங்கூர், ஆலவேலி, சேமங்கலம், ஆலங்காடு ஆகிய இடங்களிலும், தரங்கம்பாடி தாலுக்காவில் கொடவிளாகம், கிடாரங்கொண்டான், முத்தூர், 88 கீழையூர், செம்பனார்கோவில், முக்கரும்பூர், வல்லம், கஞ்சாநகரம், திருவிளையாட்டம், மேமாத்தூர் ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

பணப்பட்டுவாடா

மயிலாடுதுறை மாவட்டத்தில், குறுவை சாகுபடியை பொறுத்தவரை 38 ஆயிரத்து 441 ஹெக்டேர் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. 1 லட்சத்து 39 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 264 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ.59 லட்சத்து 79 ஆயிரத்து 420 பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை 57 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

புகார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் எங்கெல்லாம் அறுவடைக்கு தயாராகி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறதோ அந்த இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களுக்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04364 211054 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினாா். அப்போது, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் இருந்தனர்.


Next Story