வழக்கறிஞர் பெயரில் போலி சீல் தயாரித்து மோசடி

திருப்பத்தூரில் வழக்கறிஞர் பெயரில் போலி சீல் தயாரித்து மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை பிரதான சாலையை சேர்ந்தவர் வெங்கடாசலபதி. வழக்கறிஞரான இவர் நோட்டரி பப்ளிக் ஆவார். இவரது பெயரில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களான சுரேஷ், அன்பரசன் மற்றும் செந்தில்குமார் ஆகிய 3 பேரும் போலி சீல் தயாரித்து தடையில்லா சான்று வழங்கி உள்ளனர்.
இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் வெங்கடாஜலபதி புகார் செய்தார். அதன்பேரில் சுரேஷ், அன்பரசன், செந்தில்குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





