பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி

பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி
கோவை கவுண்டம்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி உஷாராணி (வயது 55) இவர் கோவை உக்கடம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் கோவை என்.எச். ரோட்டை சேர்ந்த கார்த்திக், வீரலட்சுமி, சித்திக் ஆகியோர் அனுமதி இல்லாமல் ஏலச்சீட்டு நடத்தியதாகவும்.அவர்கள் தன்னிடம் ரூ.2லட்சம் மோசடி செய்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து உக்கடம் போலீசார் கார்த்திக், வீரலட்சுமி, சித்திக், ஆகியோர் மீது மோசடி சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





