மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x

மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா தஞ்சையில் நடந்தது

தஞ்சாவூர்

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் சுப்பு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில் தஞ்சை எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம் கலந்து கொண்டு 146 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சிசுந்தரம் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.





1 More update

Next Story