டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு


டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
x

கள்ளக்குறிச்சியில் டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று(புதன்கிழமை) முதல் தொடங்க இருப்பதாக கலெக்டர் ஷ்ரவன்குமார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 92 பணியிடங்களுக்கான (துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர்(ஊரக வளர்ச்சித்துறை), டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக (22.08.2022)-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று(புதன்கிழமை) முதல் வார நாட்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

மாதிரி தேர்வுகள்

இந்த இலவச பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள் வழங்கப்படும். முழு மாதிரி தேர்வுகளும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தேர்வர்கள் தங்களது தொகுதி-1 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பநகல், புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, எண்.18/63, நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு தங்களின் விவரத்தினை தெரிவித்து பதிவுசெய்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story