ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு சட்டப்படிப்பு நுழைவுத்தேர்விற்கான இலவச பயிற்சி


ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு சட்டப்படிப்பு நுழைவுத்தேர்விற்கான இலவச பயிற்சி
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:46 PM GMT)

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு சட்டப்படிப்பு நுழைவுத்தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

விழுப்புரம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவுத் தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும் தேர்வு நடைபெறும் முறை நேரடியாகவும் நடைபெறும்.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கும் ஏனைய நுழைவுத்தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பொது நுழைவுத்தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் அடுத்தகட்ட தேர்வுகளான நேர்காணல், குழு விவாதம், எழுத்துத்தேர்வு ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

மேற்கண்ட தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும். இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story