ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கான இலவச பயிற்சி


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கான இலவச பயிற்சி
x

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவுத்தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந்த பயிற்சியை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும் தேர்வு நடைபெறும் முறை நேரடியாகவும் நடைபெறும்.இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவுத்தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பொது நுழைவுத்தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வுகளான, நேர்காணல், குழு விவாதம், எழுத்து தேர்வு போன்றவற்றுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். மேற்கண்ட தேர்வுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story