விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி


விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
x

பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிநடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம் எம்.பி, ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு 2,015 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோவி.அய்யாராசு, மாவட்ட கவுன்சிலர்கள் தாமரைச்செல்வன், பாத்திமா ஜான்ராயல் அலி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாசர், பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் பேரூர் தி.மு.க. செயலாளர் கபிலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.

1 More update

Next Story