இலவச கண் பரிசோதனை முகாம்


இலவச கண் பரிசோதனை முகாம்
x

களக்காட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதியுதவியுடன், கோபாலசமுத்திரம் கிராம உதயம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து களக்காடு சுகம் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது.

களக்காடு நகர்மன்ற தலைவர் சாந்தி சுபாஷ் தலைமை தாங்கினார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் மருத்துவத்துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்றார். டாக்டர் ஆதம் ஷேக் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் காயத்ரி தலைமையில் செவிலியர்கள் கண் பரிசோதனை செய்தனர். கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ராபின் நன்றி கூறினார்.


Next Story