250 பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு


250 பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு
x

கொரட்டி ஊராட்சியில் 250 பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம் கொரட்டி ஊராட்சியில் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் 250 பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி தலைமை தாங்கினார், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை முன்னிலை வகித்தார்.

250 பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச கேஸ் இணைப்பு மற்றும் அடுப்புகளை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கார்த்திகேயன் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கோவிந்தசாமி உள்பட, பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

1 More update

Related Tags :
Next Story