3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா


3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா
x

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

நாமக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 225 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இலவச வீட்டுமனை பட்டா

அதனைத்தொடர்ந்து எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று, துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இவற்றில் மூன்று சக்கர சைக்கிள் கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக அவரது மனுவினை பரிசீலனை செய்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.9,500 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story