90 பேருக்கு இலவச மனைப்பட்டா


90 பேருக்கு இலவச மனைப்பட்டா
x
தினத்தந்தி 2 Jan 2023 6:45 PM GMT (Updated: 2 Jan 2023 6:46 PM GMT)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 90 பேருக்கு இலவச மனைப்பட்டா கள்ளக்குறிச்சி கலெக்டர் வழங்கினார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று 19 மனுக்களை பெற்ற கலெக்டர் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 289 மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் இந்த மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 90 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா, காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் 11 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவி ஆகியவற்றை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், உதவி ஆணையர்(கலால்) ராஜவேல், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story