70 ஜோடிகளுக்கு இலவச திருமணம்


70 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வருகிற 5-ந் தேதி 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்க உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் வருகிற 5-ந் தேதி 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்க உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார்.

செயற்குழு கூட்டம்

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. செயற்குழு கூட்டம் கோவை சித்ராவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தொண்டா முத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி.நாகராஜ், முத்துச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆறுக்குட்டி, பனப்பட்டி தினகரன், முன்னாள் மேயர் ராஜ்குமார், கோட்டை அப்பாஸ், கோகுல், நாச்சிமுத்து, செந்தில் கார்த்திகேயன், சரத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

70 ஜோடிகளுக்கு திருமணம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் விளையாட்டு போட்டிகள், ரத்ததான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி கோவைக்கு வருகிறார்.

அன்று கொடிசியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

அன்று பகல் 11.30 மணிக்கு வ.உ.சி மைதானத்தில் அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாலை 4.30 மணிக்கு கொடிசியாவில் மாட்டு வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்து பரிசு வழங்குகிறார்.

மாலை 5 மணிக்கு கோவைப்புதூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த நிர்வாகிக ளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழிகள் வழங்கி விழாவில் பேசுகிறார்.

காற்றாலை மின்சாரம்

கோடைகாலமான ஏப்ரல், மே மாதத்திற்கு கூடுதலாக எவ்வளவு மின்சாரம் தேவை என்று குறித்து கணக்கிட்டு மின் கொள்முதல் டெண்டர் போடும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இதுவரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 2 கோடியே 60 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இனி ஆதார் எண் இணைக்க காலநீட்டிப்பு அளிக்கப்படாது. கோவையில் அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி. கோரிக்கை விடுத்தார். ஆனால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. காற்றாலைகளின் மூலம் உற்பத்தி செய்த மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப் பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story