நில ஆய்வாளர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு 24-ந் தேதி இலவச பயிற்சி வகுப்பு


நில ஆய்வாளர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு 24-ந் தேதி இலவச பயிற்சி வகுப்பு
x

நில ஆய்வாளர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு அரியலூரில் 24-ந் தேதி தொடங்குகிறது.

அரியலூர்

மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக மெய்நிகர்கற்றல் இணையதளம் https://tamilnaducareerservices.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யு.எஸ்ஆர்.பி., ஐ.பி.பி.எஸ்., எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி. மற்றும் யு.பி.எஸ்.சி. போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிக்கப்பட்டுள்ள நில ஆய்வாளர், வரைவாளர், நில ஆய்வாளர் மற்றும் உதவி வரைவாளர் பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு 24-ந் தேதி முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். எனவே அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Next Story