ஒண்டிவீரன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை


ஒண்டிவீரன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
x

ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஒண்டிவீரன் நினைவு தினம்

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் இருக்கும் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், மதிவேந்தன் ஆகியோர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நினைவு சின்னங்கள்

பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

சுதந்திர போராட்டத்தில் தமிழர்கள் ஆற்றிய பங்குகளை எடுத்துக்காட்டும் விதமாக, சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் இந்த அரசு மணிமண்டபம் அமைத்தும், நினைவு சின்னங்கள் எழுப்பியும் பராமரித்து வருகிறது.

நூலகம் விரைவில் திறப்பு

மேலும், ஒண்டிவீரன் புகழை பறைசாற்றும் விதமாக அவரது மணிமண்டபம் பராமரிக்கப்பட்டு, அங்கு ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், கலெக்டர் விஷ்ணு, எம்.பி.க்கள் ஞானதிரவியம், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story