திருப்புவனத்தில் அடிக்கடி மின்தடை


திருப்புவனத்தில் அடிக்கடி மின்தடை
x
தினத்தந்தி 13 Jun 2023 6:45 PM GMT (Updated: 14 Jun 2023 9:42 AM GMT)

திருப்புவனம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் பகுதியில் பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் தவித்து வருகின்றனர். மின்தடையால் சிறு தொழில் செய்பவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் என அனைவரும் இரவில் தூங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பகலிலும் இது போல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் திடீரென குறைந்த அளவு மின்சாரமே வருவதால் வீட்டில் மின்சார பொருட்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. குறைந்த அளவு மின்சாரம் வரும் நேரத்தில் மின்சார பொருட்களை பயன்படுத்தினால் சேதங்கள் ஆகிறது. இதனால் பொதுமக்கள் குறைந்த அளவு வரும் மின்சாரத்தை பயன்படுத்த தயங்குகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அடிக்கடி மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து பகல், இரவு நேரங்களில் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story