தொழிலாளியை தாக்கிய நண்பர் கைது


தொழிலாளியை தாக்கிய நண்பர் கைது
x
தினத்தந்தி 3 April 2023 12:30 AM IST (Updated: 3 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே தொழிலாளியை தாக்கிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள செம்மாட்டுபாறை பகுதியில் நேற்று முன்தினம், 20 வயது உடைய வாலிபர் ஒருவர் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் பழனி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விசாரணையில், காயமடைந்தவர் பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான விஷ்வா (வயது 20) என்பது தெரியவந்தது.

இவர், 1-ந் தேதி இரவு தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த முத்துராஜாவுடன் (25) செம்மாட்டுபாறை பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முத்துராஜா கல்லால் விஷ்வாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜாவை கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story