மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி


மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி
x
தினத்தந்தி 1 Jun 2023 6:45 PM GMT (Updated: 2 Jun 2023 7:03 AM GMT)

ஆண்டிப்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விவசாயி தவறி விழுந்தார்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிராதுகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 31). விவசாயி. நேற்று முன்தினம் இவர், அதே பகுதியில் உள்ள தோட்டத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பிராதுகாரன்பட்டி- ரோசனப்பட்டி செல்லும் சாலையில் சென்றபோது, திடீரென மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து சிவா தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த க.விலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சிவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story