பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 18 பேருக்கு கொரோனா


பிற மாவட்டங்களில் இருந்து  சேலம் வந்த 18 பேருக்கு கொரோனா
x

பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

சேலம்

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 36 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 33 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7 பேர், வீரபாண்டியில் 3 பேர், ஆத்தூரில் 2 பேர், ஓமலூர், சங்ககிரி, சேலம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மேலும் சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 5 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 4 பேர், கோவை, ஈரோட்டில் இருந்து வந்த தலா 3 பேர், கரூரில் இருந்து வந்த 2 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்த வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story