கார் டயர் வெடித்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது: பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பலி


கார் டயர் வெடித்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது: பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பலி
x

பணகுடியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலியானார். அவருடைய கணவர் மற்றும் காரில் இருந்த 8 மாத குழந்தை படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலியானார். அவருடைய கணவர் மற்றும் காரில் இருந்த 8 மாத குழந்தை படுகாயம் அடைந்தனர்.

கணவருடன் சென்ற பெண்

நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பண்டாரகுளத்தை சேர்ந்தவர் பால்ராஜ், கொத்தனார். இவர் தனது மனைவி மரிய வசந்தியுடன் (வயது 46) நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பணகுடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

பணகுடி நான்கு வழிச்சாலை வடக்கு மேம்பாலத்தில் சென்றபோது, மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

கார் மோதி பலி

அப்போது திடீரென்று காரின் முன்பக்க இடதுபுற டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் ேமாட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மரியவசந்தி மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, கீழே சென்ற சர்வீஸ் ரோட்டில் விழுந்தார். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். மேம்பாலத்தில் விழுந்த பால்ராஜ் படுகாயம் அடைந்தார். மேலும், காரில் இருந்த 8 மாத குழந்தையும் மேம்பால சாலையில் விழுந்து காயம் அடைந்தது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயம் அடைந்த பால்ராஜை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும், 8 மாத குழந்தையை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் இறந்த மரிய வசந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார் மோதிய விபத்தில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story