பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு
தர்மபுரி
பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே ஒசாலி கிராமத்தில் பச்சையம்மன் கோவில் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக இண்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடி ெகாண்டிருந்த சோமன அள்ளியை சேர்ந்த கார்த்திக் (வயது 33), ஒசஅள்ளி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (49), சோமன அள்ளியை சேர்ந்த சத்யராஜ் (35), பெருமாள் (45), ஒசஅள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் (42) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story