கணபதிசமுத்திரம் இரட்டை சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா


கணபதிசமுத்திரம் இரட்டை சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா
x
தினத்தந்தி 4 Aug 2023 6:45 PM GMT (Updated: 4 Aug 2023 6:46 PM GMT)

கணபதிசமுத்திரம் இரட்டை சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா திங்கட்கிழமை தொடங்குகிறது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள கணபதிசமுத்திரம் இரட்டை சுடலை மாடசாமி கோவில் கொடை விழா நாளைமறுநாள (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 10 மணிக்கு குடியழைப்பு பூஜை நடைபெறுகிறது. மறுநாள் காலை 9 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், மதியம் 2 மணிக்கு மதியக்கொடை, மஞ்சள் நீராடுதல், இரவு 2 மணிக்கு சாமக்கொடை, பூக்குழி இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


Next Story