கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்


கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
x

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் ரத்தினவேல் மழவராயர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சின்னதுரை எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். கந்தர்வகோட்டை தாசில்தார் காமராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கள் ஒன்றிய குழுவில் உள்ள அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் சின்னதுரை எம்.எல்.ஏ. ேபசுகையில், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டி பேசினார். பஸ் நிலையம், மருத்துவமனை, காவிரி, குண்டாறு போன்ற பணிகள் இங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறதாகவும் இன்னும் இந்த ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக நானும் இந்த ஒன்றிய குழு உடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என கூறினார். தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் பேசுகையில், உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஒன்றிய குழுவின் நிதி ஆதாரத்திற்கு தகுந்தார் போல் படிப்படியாக நிறைவேற்றப்படும். தமிழகத்திலேயே ஒரு ஒன்றிய குழுவின் கூட்டத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட வரலாற்று சம்பவம் இந்த ஒன்றிய குழுவில் நடைபெற்று உள்ளது. இந்த பெருமையை ஏற்படுத்தித் தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு எனது ஒன்றிய குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


Next Story