வரம் தரும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கடையம் வரம் தரும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
கடையம்:
கடையம் தெற்கு தெருவில் அமைந்துள்ள வரம் தரும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா 1-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து வாஸ்துசாந்தி, பிரவேச பலி, சுமங்கலி பூஜை, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாட்டை தொடர்ந்து விமானம் மற்றும் மூலவருக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





