5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:46 PM GMT)

கொலை, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ெகாலை, சிறுமிக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட வழக்குகளில் கைதான 5 பேரை ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்..

கொலை வழக்கு

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகேசன் (வயது 47), இவருடைய மகன் மகேஷ் (19) ஆகிய 2 பேரும் கொலை வழக்கில் தெனபாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் ஆனந்தராஜ் என்ற ஆனந்த் (28) என்பவர் ஒரு கொலை வழக்கில் சிப்காட் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆழ்வார்திருநகரி அண்ணாநகரை சேர்ந்த பால்ராஜ் மகன் முனியாண்டி (42) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். முறப்பநாடு கலியாவூரை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துகல்யாணி (21) என்பவரை முறப்பநாடு போலீசார் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், முருகேசன், மகேஷ், ஆனந்தராஜ் என்ற ஆனந்த், முனியாண்டி, முத்துகல்யாணி ஆகிய 5 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.


Next Story