கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

வழிப்பறி கொள்ளை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி தாலுகா ஆவுடையார்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் வில்லாளன் மகன் அன்புமணி (வயது 27). இவர் மீது விக்கிரவாண்டி பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 17.12.2022 அன்று விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வசந்தகுமார் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்துச்சென்ற சம்பவத்தில் அன்புமணியை விக்கிரவாண்டி போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் அன்புமணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து அன்புமணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story