திருச்செங்கோட்டில் கஞ்சா விற்றவர் கைது

திருச்செங்கோடு
திருச்செங்கோடு குமரேசபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குமரேசபுரம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 30) என்பவர் கஞ்சாவை சிறு சிறு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தமிழரசன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,500 மதிப்பு 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





