கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பர்கிட் மாநகரம் பஸ் நிறுத்தம் அருகே மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 36) என்பவர் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story