கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2023 6:45 PM GMT (Updated: 5 Jan 2023 6:47 PM GMT)

ஆலங்குளம் அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே ஆ.மருதப்பபுரம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்ேபரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் செல்வராஜ் (வயது 34) என்பவர் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், வாலிபர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரது வீட்டில் இருந்த சுமார் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story