எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை
x

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.சுகுமார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எம்.சுகுமார் நேற்று முத்துக்கடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலிதா ஆகியோரின் உருப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் முத்துக்கடையில் இருந்து மாந்தாங்கல் வரை ஊர்வலமாக சென்று கட்சி கொடியை ஏற்றி வைத்து, பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால், மாநில அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் பெல் தமிழரசன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட இணை செயலாளர் கீதா சுந்தர், மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், நகர செயலாளர்கள் டபிள்யூ.ஜி.மோகன், ஜிம் சங்கர், இப்ராஹிம் கலிலுல்லா, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சொறையூர் குமார், அன்பழகன், சாரதி, கிருஷ்ணன், தேவேந்திரன், பேரூராட்சி செயலாளர்கள் தினகரன், ராமசேகர், கந்தசாமி, சதீஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் வலி அகமது, சுகுணா கணேசன், நகர அவைத்தலைவர் குமரன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் முஹம்மது உமர் பாரூக் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story