வெண்ணைத்தாழி விழா


வெண்ணைத்தாழி விழா
x

சேரன்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் வெண்ணைத்தாழி விழா நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் வெண்ணைத்தாழி விழா நடைபெற்றது. இக்கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சீனிவாச பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவில் நேற்று வெண்ணைத்தாழி விழா நடந்தது. விழாவையொட்டி கோவிலில் இருந்து தவழும் கண்ணனாக புறப்பட்ட சீனிவாச பெருமாள் பல்லக்கில் வீதி உலா வந்தார். அப்போது வழி நெடுகில் நின்ற பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து தவழும் கண்ணனாக வந்த சீனிவாச பெருமாளுக்கு செய்திருந்த சிறப்பு அலங்காரம் மற்றும் பாதங்கள் கொண்ட அலங்காரத்தை பக்தர்கள் கண்டு களித்து தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story