பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க ராட்சத பள்ளங்கள்

ஆற்காடு அருகே பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க ராட்சத பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தாசில்தார் வசந்தி உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் தணிகாசலம், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் வருவாய்த் துறையினர் மணல் கடத்தலை தடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் புதுப்பாடி பாலாற்று பகுதியில் ராட்சத பள்ளங்கள் எடுத்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் இதையும் மீறி யாராவது பாலாற்றில் மணல் கடத்துகிறார்களா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





