Normal
விஷம் குடித்து சிறுமி தற்கொலை
பாளையங்கோட்டை அருகே விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விநாயகம். இவருடைய மகள் சீதா (வயது 17). இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட சீதா சம்பவத்தன்று வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீதா நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story