இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சுபாசங்கர் (வயது 31). ஜோதிடர். இவரது மனைவி சாந்தி (34). இவர்களுக்கு 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். சுபாசங்கர் ஜோதிடம் பார்ப்பதற்காக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். அதுபோல அவர் கடந்த 18-ந் தேதி கேரளா சென்று விட்டு, 20-ந் தேதி வீட்டிற்கு வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த சுபாசங்கர் வீட்டில் இருந்து வெளியேறி அருகே உள்ள கடைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்திற்கு பின் வீட்டிற்கு வந்து பார்த்த போது, சாந்தி மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த சுபாசங்கர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story