தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் ஜவகர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் கலைவாணி (வயது 17), பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் அடிக்கடி உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கலைவாணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story