இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே ஒற்றையால்விளை அம்பலபதி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி மேரி சுருதி (வயது 26). இவர்களுக்கு திருமணம் முடிந்து 2½ வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. பிரகாஷ் வெளிநாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்தார். இந்தநிலையில் பிரகாஷ் கடந்த 5-ந் தேதி சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த மேரி சுருதி அறையில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.


Next Story