இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 March 2023 6:45 PM GMT (Updated: 7 March 2023 6:45 PM GMT)

சீர்காழி அருேக இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருேக இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்.ஐ.சி.முகவர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா சட்டநாதபுரம் கம்பன் நகரை சேர்ந்தவர் தினகரன். (வயது35), எல்.ஐ.சி. முகவர். இவருடைய மனைவி ஜெயசுந்தரி (32). இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜெயசுந்தரி கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தூக்கில் பிணமாக தொங்கினார்

இந்த நிலையில் ஜெயசுந்தரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் சமையல் அறையில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.

மறுநாள் காலையில் தினகரன் எழுந்து வந்து பார்த்த போது மனைவி ஜெயசுந்தரி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயசுந்தரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story