இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாணியம்பாடி அருகே திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த திகுவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கும் பெத்தவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த நந்தினி (22) என்பவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பெரியசாமி கட்டிட வேலைக்காக பெங்களூரு சென்றுவிட்டார்.

நந்தினி திகுவாபாளையம் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்தார். அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசில் புகார்

இதுகுறித்து தகவல் அறிந்த நந்தினியின் பெற்றோர் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story