இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

கொல்லங்கோடு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே உள்ள எடவாறு பகுதியை சேர்ந்தவர் வசந்தா. அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு ஒரு மகனும், ஜெயஸ்ரீ (வயது23) என்ற மகளும் உண்டு. மகனுக்கு திருமணமான நிலையில் மகள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் வசந்தா வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது அறையில் ஜெயஸ்ரீ தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த வசந்தா கதறி அழுதார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் ஜெயஸ்ரீயை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story