இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

நாங்குநேரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சிதம்பரநாதன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கலா. இவர்களுடைய மகள் அனுதர்ஷினி (வயது 17). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு, ஏர்வாடியில் உள்ள பேன்சி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரும், உறவினரான வாலிபரும் காதலித்து வந்ததாகவும், அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், பின்னர் அவர்கள் பேசவில்லை என்று தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அனுதர்ஷினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் சமையலறையில் சேலையால் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலையில் கண்விழித்த பெற்றோர் தங்களது மகள் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த அனுதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்குநேரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story